தமிழகம்

மாமூல் தர மாட்டியா? பெண் பழ வியாபாரி கொடூர கொலை!

சென்னை திருவொற்றியூரில், மாமூல் தர மறுத்ததால் பெண் வியாபாரியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை: சென்னை, திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் மாரி (55). இவரது மனைவி கௌரி (50). இவர்கள் இருவரும் அதே பகுதியில் சாலை ஓரமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று (நவ.12) மாலை இவர்களது கடைக்கு ஒருவர் வந்து உள்ளார்.

அவர் திடீரென, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மனைவி கௌரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம், கணவர் மாரிக்கு தலை மற்றும் கையில் கத்தியால் வெட்டியதில் காயம் ஏற்பட்டது.

இதனிடையே, தம்பதியை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற நபரை அருகில் இருந்தவர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், இது குறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பிடித்து வைக்கப்பட்டு இருந்த நபரைக் கைது செய்தனர். மேலும், உயிரிழந்த கௌரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், பலத்த காயம் அடைந்த மாரியை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மாயமான கள்ளக்காதலி… 2 நாள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி : அரங்கேறிய நாடகம்!

இதனையடுத்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கௌரியையும், மாரியையும் வெட்டிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் (52) என்ற பர்மா சேகர் என்பதும், கௌரிக்கும், சேகருக்கும் 10 நாட்களுக்கு முன்பு ஒரு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நாளன்று, மதுபோதையில் கடைக்கு வந்த சேகர், கெளரியிடம் மாமூல் கேட்டு உள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மேலும், சேகரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

14 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

14 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

15 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

15 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

15 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

16 hours ago

This website uses cookies.