விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் டி.கொசப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்களிப்பளிப்பதற்காக வரிசையில் நின்றுக் கொன்றிருந்த பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதில் காயமடைந்த அந்த பெண் அலறியுள்ளார். அந்த பெண்ணின் அலறல் சப்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அந்த பெண்ணின் முன்னாள் கணவர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து அவர் வாக்களித்தார்.
பின்னர் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த பெண்ணின் முன்னாள் கணவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
This website uses cookies.