Categories: தமிழகம்

போலி மருத்துவரிடம் சிகிச்சை பார்த்த பெண் திடீர் உயிரிழப்பு : குடியாத்தத்தில் பதற்றம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த சேதுபதி என்பவரின் மனைவி பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள பெண் மருத்துவரிடம் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் மேலும் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார் அந்த பெண்ணின் உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது

இதனிடையே போலி மருத்துவரின் சிகிச்சையால் தான் அந்த பெண் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வைரலானது

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் அந்த போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்

உத்தரவின் பேரில் குடியாத்தம் போலீசார் குடியாத்தம் பிச்சனூர் பேட்டியை சேர்ந்த மருத்துவ படிப்பு படிக்காமல் 12ம் வகுப்பு படித்து ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் பிரியா (வயது40) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த பிரியங்கா என்பவருக்கு மருத்துவம் பார்த்ததாக ஒப்புக்கொண்டார்

மேலும் போலி மருத்துவர் பிரியாவை கைது செய்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதால் தான் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

47 seconds ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

21 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

33 minutes ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

1 hour ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

1 hour ago

விடாது கருப்பு போல் துரத்தும் சாபம்? காந்தாரா ஹீரோவை குறி வைத்த மரணம்! ஒரு வேளை இருக்குமோ…

தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…

2 hours ago

This website uses cookies.