Categories: தமிழகம்

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை.. இளம் பெண் பாலியல் பலாத்காரம்? : நடிகர் விஜய் அலுவலக உதவியாளர் கைது!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை.. இளம் பெண் பாலியல் பலாத்காரம்? : நடிகர் விஜய் அலுவலக உதவியாளர் கைது!!

சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் ஒரு புகாரை கொடுத்தார்.

அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: சோசியல் மீடியாவில் நடிகர் விஜய்யின் கணக்காளர் என கூறி அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்த சென்னை கிண்டியை சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர் எனக்கு என் தோழி மூலம் அறிமுகமானார்.

அவருடன் நண்பராக நினைத்து பழகினேன். திடீரென என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் உறுதி அளித்தார். இதன் பேரில் என்னை பல முறை தனி இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அது போல் என்னிடம் பல்வேறு காரணங்களை கூறி ரூ 10 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த விஷயம் எனக்கு தெரியவந்தது.

இதையடுத்து நான் அவரிடம் நியாயம் கேட்க போன போது என்னை மிரட்டினார். இருப்பதென்றால் என்னுடன் எப்போதும் போல் இருந்து கொள். திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது என்றார்.

மேலும் மீறி என்னை தொல்லை செய்தால் இருவரும் பாலியல் ரீதியான நடவடிக்கையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டினார்.

எனவே ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் ராஜேஷ் கைது செய்யப்படவில்லை. இதனால் அந்த இளம்பெண் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தன் மீதான புகார் குறித்து ராஜேஷ் கூறியிருப்பதாவது: நான் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். துணை நடிகை ஒருவர் மூலம் என் மீது புகார் கொடுத்த அந்த பெண் அறிமுகமானார்.

அவருக்கு வேலை வேண்டும் என கேட்டார்,. நானும் உதவி செய்வதாக சொன்னேன். பின்னர் நான் மாதம் ரூ 1.50 லட்சம் ஊதியம் வாங்கி வந்தேன். என்னால் மாத சம்பளத்திற்கு வேலை செய்ய முடியாது. குட்டி கிச்சன் என்ற உணவு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க போகிறேன், அதற்கு உதவி செய்யுங்கள் என்றார்.

இது தொடர்பாக வாட்ஸ் ஆப் வாயிலாக தகவல் பரிமாற்றம் நடந்த போது ஆபாசமாக பேசத் தொடங்கினார். நான் எந்த பெண்ணுக்குமே பாலியல் தொல்லை கொடுத்ததில்லை. பணம் பறிக்கும் நோக்கமும் இல்லை. எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தேன். ஆனால் என்னை பாலியல் ரீதியில் அவர்தான் எனக்கு தொல்லை கொடுத்தார். அதற்கான ஆதாரம் இருக்கிறது. அவர் மீது நான் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.

இந்த நிலையில் ராஜேஷை அண்ணாநகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

34 minutes ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

35 minutes ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

1 hour ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

1 hour ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!

கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…

3 hours ago

This website uses cookies.