பழனி அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் சேம்பர் இயங்கி வருகிறது. இந்த சேம்பரில் கணக்கராக வேலை செய்து வந்தவர் சரவணன் (23), நேற்று முன் தினம் இரவு சேம்பருக்கு சென்ற சரவணன் உயிரிழந்தார்.
சரவணன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்து போலீஸார் மற்றும் கிராம மக்கள் சேம்பரில் திரண்டனர். சரவணனை கொன்ற குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் போலீஸாரிடம் வாக்கு வாதம் செய்தனர்.
கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் சரவணன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சேம்பரில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கொலை குற்றவாளி தீவிரமாக தேடினர். சேம்பரில் தங்கிப் பணியாற்றும் வட மாநிலத்தைச் சார்ந்த கோபால் மற்றும் அவரது மகள்கள் 16 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுமி இருவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த அன்று சேம்பரில் கோபால் மகள்கள் தங்கி இருந்த அறைக்குச் சரவணன் சென்று சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து சிறுமிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்தனர். விசாரணையில் 16 வயது சிறுமி சரவணனை கொலை செய்ததும், இந்தக் கொலையை மறைப்பதற்காக சிறுமியின் தந்தை மற்றும் 14 வயது சகோதரி இருவரும் உதவி செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் சரவணன் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும் சம்பவம் நடந்த இரவு நேரத்தில் சிறுமியை சரவணன் மறைவான இடத்திற்க்கு அழைத்து சென்ற போது சிறுமி சரவணனை தள்ளிவிட்டதில் கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் அடிபட்டு உயிரிழந்ததும் விசாரணையில் தெயரிவந்தது.
பின்னர் தனது தந்தை மற்றும் தங்கையிடம் நடந்ததை சிறுமி கூறிய போது கொலையை மறைப்பதற்கு இருவரும் உதவி செய்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது.
வடமாநிலத் தொழிலாளியான கோபால் மற்றும் இரண்டு மகள்கள் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தனியார் செங்கல் சேம்பரில் வடமாநில சிறுமி இளைஞரை கொலை செய்த சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.