திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அய்யனார் புரத்தை சேர்ந்தவர் வெள்ளி மகன் வேலு 10 ஆம் வகுப்புவரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 7 ஆம் தேதி இரவு அய்யனார்புரம் அருகேயுள்ள அரவங்குறிச்சியில் சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்து படுத்து விட்டார். இரவு முழுவதும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரது பெற்றோர் வேலுவை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நத்தம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். பானி பூரி சாப்பிட்டு 17 வயது இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.