திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சரளப்பட்டியை சேர்ந்த அகில் குமார் வயது ( 24 )என்ற பக்தர் பாதயாத்திரையாக வருகை தந்துள்ளார்.
பழனி அருகே உள்ள இடும்பன் குளத்தில் புனித நீராடி கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் அவரை உடனடியாக மீட்டு முதலுதவி அளிக்கபட்டு அருகில் இருந்த பக்தரின் கார் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பழனி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உடன் வந்த பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.