திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள சரளப்பட்டியை சேர்ந்த அகில் குமார் வயது ( 24 )என்ற பக்தர் பாதயாத்திரையாக வருகை தந்துள்ளார்.
பழனி அருகே உள்ள இடும்பன் குளத்தில் புனித நீராடி கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் அவரை உடனடியாக மீட்டு முதலுதவி அளிக்கபட்டு அருகில் இருந்த பக்தரின் கார் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பழனி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உடன் வந்த பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.