அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை உடனடியாக வழங்கக்கோரி நெல்லையில் ஆவின் பால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் அகவிலைப்படியை 3% உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த ஜனவரி 1ம் தேதி மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் கூட, அங்குள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நஷ்டத்தை சுட்டிக்காட்டி நெல்லையில் உள்ள ஆவின் பால் ஊழியர்களுக்கு இதுவரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை உடனடியாக வழங்க கோரியும் நெல்லை ஆவின் பால் ஊழியர்கள் இன்று ரெட்டியார்ப்பட்டி ஆவின்பால் பண்னை முன்பாக போராட்டம் நடத்தினர்.
அரசு தங்களின் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் நெல்லை ஆவின் பால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.