சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடியிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருப்பவர், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமலாக்கத்துறை சென்னை மண்டலம், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “அமலாக்கத்துறை சென்னை மண்டலம், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு 2002-இன் கீழ் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்தின் இரு அசையா சொத்துக்களை ஜனவரி 9ஆம் தேதி அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
இதையும் படிங்க: முகம் எரிந்த நிலையில் மிதந்த 3 இளைஞர்களின் சடலங்கள்.. காஞ்சி அருகே பரபரப்பு!
இந்த சொத்தின் மதிப்பு தோராயமாக 100.92 கோடி ரூபாய் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிய விவகாரத்தில், தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக, வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த அக்டோபர் மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.