தமிழகம்

பாத்ரூம் கூட போகக்கூடாது.. 8 நாட்கள் உணவின்றி தவித்த நீலகிரி பெண்கள்.. டிஜிட்டல் அரெஸ்ட்டின் உச்சக்கட்டம்!

நீலகிரியில் டிஜிட்டல் அரெஸ்ட்டில் சிக்கிய இளம்பெண் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் இருந்து மொத்தமாக 30 லட்சம் ரூபாயை மர்ம கும்பல் மோசடியாகப் பெற்றுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.

அப்போது, சர்வதேச கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். மேலும், மும்பையிலிருந்து சீனாவுக்குச் செல்லும் பார்சல் ஒன்றில் போதைப் பொருட்கள் உள்ளதாகவும், அந்தப் பார்சலில் உங்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் போன்றவையும் உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

அது மட்டுமல்லமால், இது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், எனவே மும்பை சைபர் கிரைம் போலீசிடம் இருந்து உங்களுக்கு அழைப்பு வரும் எனக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், ஸ்கைப் ஆப் மூலம் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது.

அப்போது, “உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து உள்ளோம். எனவே விசாரணை முடியும் வரை எங்கும் நகரக்கூடாது, அழைப்பையும் துண்டிக்கக் கூடாது. இதுகுறித்து வேறு யாரிடமும் தகவலைக் கசியவிட்டால் உங்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும்” என்றும் அவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் பட துல்கர் போல் வாழ ஆசை.. எகிறி குதித்து தப்பியோடிய பள்ளி மாணவர்கள்!

இதனால் அடுத்த 8 நாட்களுக்கு ஏதும் உண்ணாமலும், உறங்காமலும் இயற்கை உபாதைகளுக்கு கூடச் செல்ல முடியாமல் தனி அறையில் தவித்து வந்துள்ளார். மேலும், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் எங்களுக்கு அனுப்ப வேண்டும். நாங்கள் அதை ஆய்வு செய்துவிட்டு உங்களுக்கு திரும்ப அனுப்புகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய அந்தப் பெண், தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த 16 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இவ்வாறு அப்பெண் பணம் அனுப்பிய உடனே அந்த அழைப்பைத் துண்டித்து உள்ளனர். பின்னர், அந்தப் பெண் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நீலகிரியில் தொடரும் டிஜிட்டல் அரெஸ்ட்: இதனால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அப்பெண், இதுகுறித்து நீலகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், நீலகிரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியைக்கும் அழைப்பு வந்து உள்ளது.

அப்போத், டெல்லி போலீசில் இருந்து பேசுவதாகக் கூறி ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்த அக்கும்பல், அவரிடம் 15 லட்சம் ரூபாயைப் பறித்துக் கொண்டு அழைப்பைத் துண்டித்து உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

18 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

19 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

19 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

19 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

20 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

21 hours ago

This website uses cookies.