தமிழகம்

போலீஸ் லத்தியாலே போலீசுக்கு அடி.. ராஜபாளையத்தில் பயங்கரம்.. தீவிர தேடுதல் வேட்டை!

ராஜபாளையத்தில் விசாரிக்கச் சென்ற காவலர்களை லத்தியால் தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட் அருகே இருக்கும் நேரு சிலை அருகில் உள்ள டாஸ்மாக்கில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் 6 பேர் சேர்ந்து இசக்கி என்பவரைத் தாக்கி உள்ளனர்.

இதனால் காயம் அடைந்த இசக்கி, ரத்தக் காயங்களுடன் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், இசக்கியைத் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதில், அவர்கள் நேரு சிலை பின்புறம் இருக்கும் மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்தது தெரிய வந்து உள்ளது.

இதனையடுத்து, அவர்களிடம் விசாரித்த வடக்கு காவல் நிலைய காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர், மறுநாள் காலை அந்த கும்பலை காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தக் கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு கட்டத்தில், காவலர் கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி அவரையேத் தாக்க தொடங்கி உள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற மற்றொரு காவலரையும் அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், சிறிது நேரத்திற்குப் பிறகு காயம் அடைந்த காவலர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவலர்கள், இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: என் பேரே இல்லை.. மருமகனின் விளக்கம்.. மாமனாருக்கு தொடரும் ரெய்டு.. ED சோதனையில் சிக்கியது என்ன?

மேலும், இது குறித்து தாக்குதலுக்கு உள்ளான காவலர்கள் அளித்த புகாரின் பேரில், கீழ ஆவரம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, கிளிராஜன், பாஞ்சாலி ராஜா மற்றும் பாண்டியராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது இதில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, பலரது கண்டனத்திற்கும், பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் கருத்துகளைப் பெற்று வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை : தூய்மை பணியாளர்கள் ஆதங்கத்துடன் போராட்டம்!

குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…

9 minutes ago

அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?

நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

31 minutes ago

இனி குட் பேட் அக்லிக்கு மூடு விழாதான்! மூணே வாரத்துல இப்படி சோலியை முடிச்சிட்டாங்களே?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

37 minutes ago

படையப்பா ரஜினிக்கு பதில் செந்தில் பாலாஜி… கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…

56 minutes ago

மறுபடியும் என் படத்துல நயன்தாராவ போடாதீங்க… சூப்பர் ஸ்டாரின் திடீர் கட்டளை : என்ன ஆச்சு?

நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…

1 hour ago

பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!

வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…

2 hours ago

This website uses cookies.