கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடன் மனு அளிக்க வந்தனர்.
மனு அளிக்க கல்லூரியிலிருந்து திரளாக வந்த மாணவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களின் நலன் மற்றும் கல்லூரி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் யுஜிசி போன்ற பலவற்றில் முறைகேடு நடந்து வருவதாகவும் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது விசாரணை நடத்துவதற்கு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியர் பாத்திமா கடந்த ஆறு மாதங்களாக பாடங்கள் எதுவும் எடுக்காமல் இருந்து வரும் நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தங்களது கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.