கன்னியாகுமரி : நாகர்கோவிலில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் 20 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.1 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்து. 91 பவுன் நகை, பணம் சிக்கியது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கண்மணி. இவர் ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2017ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தன. நாகர்கோவில் கீழ ராமன்புதூர் பகுதியில் இவரது வீடு உள்ளது. இவரது கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார்.
இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
ஆய்வாளர் கண்மணி வீட்டில் நடந்த சோதனையில் 7 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கப்பணம், 91 சவரன் நகை, சிக்கியது . நிரந்தர வைப்பு தொடர்பான பத்திரம் மற்றும் நில பத்திரங்களை அரசியல் பிரதிநிதிகள் என ஒரு போலியான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது அவர்களின் வருவாயை 171 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. இதேபோல் ஆய்வாளர் கண்மணியின் தோழியான அழகு நிலையம் வைத்திருக்கும் அமுதா என்பவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் ரூ.23 லட்சத்திற்கான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய தமிழகத்தின் சிறந்த காவல் ஆய்வாளர்களில் ஒருவராக கண்மணி தேர்வு செய்யப்பட்ட அவருக்கு விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மயங்கி விழுந்த விஷால் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருநங்கைகளுக்கான…
அதிக பட்ஜெட் வேணும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “LIK”. இத்திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ்…
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
This website uses cookies.