நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கொலை குற்றவாளி.. துரத்திய போலீசார் : மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 8:21 pm
Vellore - Updatenews360
Quick Share

நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய கொலை வழக்கு குற்றவாளி
நீதி மன்றத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஓடிய குற்றவாளியை துரத்தி பிடித்த போலீசார்

வேலூர் அருகதம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (23)
கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்து இன்று விசாரணைக்காக சத்துவாச்சாரி பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு போலீசார் மதிய உணவு கொடுத்தனர்.

அதை சாப்பிட்டுவிட்டு கை கழுவுகிறேன் என்று தண்ணீர் பாட்டிலுடன் தப்பி ஓடி உள்ளார். நீதிமன்றத்தை விட்டு வெளியே ஓடி தேசிய நெடுஞ்சாலையில் ஓடியுள்ளார். அப்போது போலீசார் துரத்திச் சென்றனர்.

போலீசார் நெருங்கிய உடன் நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மேல் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் அவருக்கு கால் உடைந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் மடக்கி பிடித்தனர். இச்சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Views: - 428

0

0