அஜித்தின் அடுத்த படமான ‘துணிவு’ 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன் மோதுவதால், இரண்டு படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், இந்தப் பொங்கல் பண்டிகை போட்டியான பண்டிகையாகும்.
வினோத் இயக்கத்தில், ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் திரைப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விஜய்யின் 66-வது படமான வாரிசு படம், 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அந்தப் படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களின் வியாபாரமும் பரபரப்பாக நடந்து வருகிறது. எந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என அது பற்றிய தகவல்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. ‘துணிவு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் ‘வாரிசு’ படம் அதிக தியேட்டர்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.
இதனிடையே, ‘வாரிசு’ தீ தளபதி பாடலை தொடர்ந்து, துணிவு படத்தின் ‘Chilla Chilla’ பாடல் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், துணிவு படத்தின் அடுத்த அப்டேட் என்ன..? எப்போது வெளியாகும் என்று AK ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், துணிவு படத்தின் “Gangstaa” பாடலின் Lyrics-ஐ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், தெறிக்க விடும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன், டிரெண்ட் செய்யவும் தொடங்கி விட்டனர்.
அதோடு, 25ம் தேதி “Gangstaa” பாடல் வெளியாகும் என்று செய்தியையும் படக்குழுவினர் வெளியிட்டிருப்பதால், அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.