தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். சொல்லிக் கொள்ளும் படியான கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும் நிறைய படங்களில் துணை நடிகராக தலைக் காட்டியுள்ளார். தற்போது சர்ச்சைக்குறிய வகையில் பேட்டிகளை அளித்து தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.
இதனிடையே, கே.ஜி.எஃப் 2 பட பிரஸ் மீட்டில் கலந்துக்கொண்டு கேட்ட கேள்வி மேடையில் அமர்ந்து இருப்பவர்களை முகம் சுலிக்கவும், கோபமடையவும் செய்துள்ளது.
அதன்படி பிரஸ்மீட்டிங்கில் கேஜிஎப் படத்தின் படக்குழுவினர் மேடையில் அமர்ந்தனர். அப்போது பயில்வான் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் ஈஸ்வரி ராவ்விடம் நீங்கள் இருவரும் உங்களுடைய ஜாதியை தூக்கி பிடிக்கிறீர்களா? ஏன் பொது வெளியில் நடிக்க வந்த பின்னரும் உங்கள் ஜாதி அடையாளத்தை கைவிடவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.
இது மேடையில் அமர்ந்திருந்த நடிகைகளுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கேட்ட மற்ற பிரபலங்கள் வேறு கேள்வியினை கேளுங்கள் எனக்கூறி பேச்சினை மாற்றினர். பயில்வானின் இந்த கேள்வியால் சிறிது நேரம் அங்கே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பயில்வான் ரங்கநாதன் தேவையில்லாத பேட்டிகள் மூலமும், இவ்வாறான கேள்விகள் மூலமும் தன்னை பொது வெளியில் அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இவருடைய இவ்வாறான பேச்சுகள் தேவையற்றது மற்றும் அர்த்தமற்றது என அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர் அடங்கிய பாடில்லை.
தமிழகத்தில் நடந்த சமூகநீதி போராட்டங்களாளும், அரசியல் செயல்பட்டுகளாளும் பெயருக்கு பின்னர் ஜாதி பெயரை இணைத்துக் கொள்ளும் வழக்கம் கைவிடப்பட்டது. ஆனால் இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் இந்த வழக்கம் இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு தான் வருகிறது. இதைக்கூட புரிந்துக் கொள்ளாத பயில்வானை பிரஸ்மீட்டில் செய்தியாளராக அமர வைத்தது யார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.