நடிகர் பாபி சிம்ஹாவுக்கு கொலை மிரட்டல்…. கூலியாட்களுடன் சிக்கிய முக்கியப்புள்ளி!!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமாக நிலம் உள்ளது.இவர் கொடைக்கானலை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஜமீர்,காசிம்முகமது ஆகியோரை வைத்து கட்டிடம் கட்டிவந்துள்ளார்.
இதனிடையே பாபி சிம்ஹாவுக்கும் கட்டிட ஒப்பந்ததாரர்களுக்குமிடையே ஒரு சில காரணங்களால் மன கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணி தாமதமாக நடைபெற்று வந்துள்ளது. இதன் காரணமாக பாபி சிம்ஹா அவர்களிடம் கட்டிடத்தை விரைந்து முடித்துத்தர கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கட்டிட ஒப்பந்ததாரர்கள் இருவரும் நடிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடும் சொற்களை பேசியதாகவும், இவர்களுடன் சேர்ந்து கொடைக்கானலை சேர்ந்த உசேன், பேத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோரும் மிரட்டியதாகவும் நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் இவர்கள் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முறையான அனுமதி பெற்று தான் கட்டிடம் கட்டி வருவதாகவும், தன்னை பேத்துப்பாறை மகேந்திரன் என்பவர் கலங்கப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் மகேந்திரன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிலையில் மீண்டும் மீண்டும் இது போன்ற நடவடிக்கைகள் ஈடுபடும் இவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகர் பாபி சிம்ஹா கூறியுள்ளார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.