“எங்க அப்பாவ காணோம்”… கலங்கி பேசிய பிரபல நடிகர்.. நடந்தது என்ன?

தமிழ் திரையுலகில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக துணை வேடங்களில் நடித்துள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு படம் அறிவிப்பு வெளியானது முதலில் படத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். படத்திற்காக இவர் கொடுத்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது.

சிம்பு ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது ‘வெந்து தணிந்தது காடு’ படம். ‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட கம்பேக்கிற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் இந்தப்படத்தில் நடித்துள்ளார் சிம்பு. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது இந்தப்படம்.

இந்தப்படத்தின் புரோமொஷனில் ‘வெந்து தணிந்தது காடு’ எஸ்டிஆருக்கு வணக்கத்த போடு என்ற வாசகத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். மேலும் பல படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு வெளியே விமர்சனம் கொடுத்தும் சோஷியல் மீடியாவில் பிரபலமானார்.

இந்நிலையில் தனது தந்தை காலையில் வாக்கிங் சென்றதாகவும் இதுவரை திரும்பவில்லை. தனது தந்தையை காணவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அண்மையில் ‘வெந்து தணிந்தது’ காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கூல் சுரேஷை நேரில் சந்தித்து அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக அளித்ததோடு அவரது பிள்ளையின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.