நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் நடந்த தலைவர் 170 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு சென்றார்.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாபச்சன், பகத் பாஸில், ராணா ,துசாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.
பணகுடியில் ஆர்.எம்.எஸ் ஓடு தொழிற்சாலையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை பங்கேற்றார். மொத்தம் 3 நாட்கள் பணகுடி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கும் நிலையில், இன்று மாலை படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு ரசிகர்களை பார்த்து கை அசைத்து விட்டு சென்றார். அவரை மொத்த ஊர்மக்களும் திரண்டு நின்று வரவேற்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் நாளை படபிடிப்பில் பங்கேற்கிறார். படப்பிடிப்பு நடைபெறுவதையொட்டி, ஓடு தொழிற்சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.