Categories: தமிழகம்

ஆமாங்க நான் ஜாதி வெறியன் தான்.. இதை சொன்னா உங்களுக்கு கோபம் வருமா?.. நடிகர் ரஞ்சித் ஆவேசம்..!

கோவை: நாடக காதலை எதிர்ப்பதால் தன்னை சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் என நடிரும் இயக்குநருமான கொங்கு ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் கொங்கு ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ரஞ்சித் மற்றும் குழுவினர் கோவை கோனியம்மன் திருக்கோவிலில் திரைப்படத்தின் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் திரைப்படம் வருகிற ஜூலை 5ம் தேதி வெளியாக உள்ளதாகவும் சுமார் 200 திரையரங்குகளில் படம் திரையிடப்பட உள்ளதாகவும் கூறினார். நாடக காதலை மையப்படுத்தி விழிப்புணர்வு படமாக தான் இயக்கியும், நடித்தும் உள்ளதாகவும் கோவை பகுதியை சுற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார். நாடகக் காதலில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டதாகவும் பணக்கார பிள்ளைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நாடக காதல் தான் இது எனவும் குறிப்பிட்டார்.

இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை, கொலை, தற்கொலை போன்றவை நடைபெற்று வருவதாகவும் சுயமரியாதை திருமணம் என சொல்லி எவ்வளவு கொடுமை நெல்லையில் நடந்துள்ளது என சுட்டிக்காட்டியதுடன், சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும் எனவும் சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும் என்றும் தெரிவித்தார். மேலும், சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணிற்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு மற்ற பெண்களுக்கு பண்ண சொல்லுங்க எனவும், ஆனால் அவர்கள் பண்ண மாட்டார்கள் எனவும் கூறினார்.

பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்க கூடாது என அப்படி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பெற்றவர்கள் தான் உயர்ந்த சாதி பெற்றவர்களை பிரித்து கல்யாணம் நடத்தி வைப்பதற்கு பதில் அவர்களுடன் சேர்த்து வைத்து அவர்களின் சம்மதத்துடன் நடத்தி வைக்கலாமே எனவும் ஆலோசனை வழங்கினார். நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதிவெறியனாக பார்க்கிறார்கள் நாடக காதலை எதிர்ப்பதால் நான் சாதி வெறியன் என்றால் ஆம் நான் சாதி வெறியன் தான் எனவும் சாடினார்.

மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள மாட்டிறைச்சி வசனம் குறித்த கேள்விக்கு நாய், பன்றி, காக்கா, பொங்கல் உள்ளதா??? மாடுகள் தெய்வமாகவும், விவசாயத்திற்கு கலாம் காலமாக பக்கபலமாக உள்ளது என்பதில் தான் மாடுப்பொங்கலுக்கு அரசு விடுமுறை அளித்து கொண்டாடுகிறோம். எனவே, மாட்டை தெய்வமாக வழிபடுவதால் அது தொடர்பான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறினார். இதேப்பொல் என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ!! அவர்களும் நாடக காதலை ஆதரிப்பவர்கள் என்றார்.

தனக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்க திட்டமில்லை, சேரவும் திட்டமில்லை என்ற அவர், கள்ளச்சாராயம் விற்பவர்கள் தனக்கான இருக்கையை பிடித்து சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர் எனவும் கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா?? எனவும் கேள்வி எழுப்பினர். நாளைய தலைமுறையை காப்பாற்ற அரசியல் மாற்றம் வேண்டும் என வலியுறுத்திய நடிகர் ரஞ்சித், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சட்டமன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து தான் அரசியல் கட்சியினர். போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர்.

விவசாய தற்கொலைகளுக்கு ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை எனவும் விமர்சித்தார். சாலைகளில் திரும்பும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்லோ பாய்சன் அது என்றும் அதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை என்றும் ஆதங்கப்பட்டார். மேலும், கள்ளச்சாராயத்தை ஆட்சியாளர்களால் ஒழிக்க முடியாது எனவும், பிளாஸ்டிக்கையே இவர்களால் ஒழிக்க முடியாத போது எப்படி கள்ளசாராயத்தை ஒழிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

அரசியல் மிகப்பெரிய வியாபாரம் எனவும், எனவே அதில் அரசியல் கடைகள் ( கட்சி ) உள்ளது புதிய கடைகளும் ( கட்சி ) திறக்கப்படவுள்ளது. நல்ல அரசியல் கட்சி வர வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்பது ஏற்று கொள்ள இயலாது. ஒரே முயற்சியாக மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் கூறிய அவர், கள்ளுகடையை திறக்க வேண்டும் எனவும் கள்ளுகடையில் வருமானம் இல்லாத காரணத்தினால்தான் இவர்கள் விரும்புவதில்லை, மதுவில் வரும் வருமானத்தில்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.

200 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. இதேபோல் இந்த கவுண்டம்பாளையம் படத்திற்கு A சான்றிதல் வழங்கியிருப்பதாகவும் அதற்காக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக நினைக்க வேண்டாம் நாடக காதல் குறித்த ஆழ்ந்த கருத்துகள் இருப்பதால் இந்த சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.