திண்டுக்கல், சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டை சுற்றி கிரிவல நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் முளைப்பாரி எடுத்து கிரிவலம் சென்றனர். இந்த நிகழ்வில் நடிகர் மற்றும் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டார்.
பின் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “சித்திரை பௌர்ணமி அன்று வழக்கமாக கிரிவலம் சென்று வருகிறேன். அனைத்து பகுதிகளுக்கும் சென்று உள்ளேன். தமிழ்நாடு ஆன்மீக பூமி மிகச் சிறப்பான இந்த மண்ணில் கால் வைப்பது பாக்கியமாக கருதுகிறேன்.
இதையும் படியுங்க: ஊழலில் 9 அமைச்சர்கள்.. ஒருத்தருக்கு ஒருமாசம் என்றாலும்… முதலமைச்சரை கடுமையாக சாடிய தமிழிசை!
ஆயிரம் ஆண்டுகள் பழமையான அபிராமி அம்மன் கோயிலில் பலர் வேண்டுதல் வைத்து நிறைவேறியுள்ளது. அதேபோல் நானும் வேண்டுதல் வைத்து இங்கு வந்துள்ளேன். தற்போது, மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்ல உள்ளோம் பலர் முளைப்பாரி எடுத்து வருவதையும் இங்கு காண முடிகிறது. இங்கு கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.
சிறுபான்மையினரை பாதுகாக்கும் ஒரே அரசாக திமுக திராவிட மாடல் அரசு தான் உள்ளது என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, அரசியல் என்பது பொழப்பு. இன்று அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது. சாதி மதத்தை விற்று பிழைப்பது என்று இருக்கிறது.
ஆனால் இங்கு இருக்கும் மக்களுக்கு சாதி, மதம் கிடையாது. இங்கே மனசார வந்து வேண்டுவது கடவுளை மட்டும்தான். சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ இறைவனுக்கு இந்த நாடகம் தெரியாது. எனக்கு இதை பற்றி கருத்து சொல்வதற்கு பெரிதாக தெரியாது.
2026 தேர்தல் திமுக-விற்கும் தவெக-விற்கும் என விஜய் கூறுவது குறித்த கேள்விக்கு, அனைவரும் கட்சி ஆரம்பிக்கலாம் மக்களுக்கு நல்லது செய்வது என்றால் மனசார வரவேற்கிறேன். எல்லோரும் நல்லது செய்வதற்காகவே அரசியல் குள்ளே வருகிறார்கள்.
மக்கள் நல்லது அனுபவித்து உள்ளனரா? கல்வி மருத்துவம் இட ஒதுக்கீடு குறிப்பாக விவசாயத்தில் ஏற்றம் குறைவு என பின்னடைவு இருந்து கொண்டே தான் உள்ளது. பொருளாதாரத்தில் நாம் இன்னும் நிறைய முன்னேற வேண்டியுள்ளது.
விஜய் அவர்கள் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது நோக்கம் தெரியவில்லை. அதனால், கருத்து சொல்ல எனக்கு தெரியவில்லை.
திண்டுக்கல் மையப்பகுதியில் உள்ள அபிராமி அம்மன் சிலையை மலைக்கோட்டை மேலே வைக்க வேண்டும் என்ற திண்டுக்கல் மக்களின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, ஆயிரம் ஆண்டுகள் மேலே இருந்த அபிராமி அம்மன் 250 ஆண்டுகளாக கீழே இருப்பதாக தெரிவிக்கின்றனர். இருந்தாலும் எல்லா மக்களின் கோரிக்கை.
இங்கு எந்த சாதி மத பிரச்சனையும் கிடையாது. கடவுளின் பூர்வீகம் எங்கு உள்ளது அங்கு செல்ல வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கட்டாயம் நானும் வேண்டுகிறேன் கூடிய விரைவில் அரசாங்கமும் மக்களும் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன்.
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வைகைச் செல்வன் கூறியது குறித்த கேள்விக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் நடுவில் அரசாங்கம் நம்மளை பாதுகாத்து வருகிறது. இதுபோன்ற அரசியல் பேச்சுகளை கேட்கும் பொழுது சிரிப்பு வருகிறது. அவர் கூறியது குறித்த எனக்கு சரியாக தெரியவில்லை” என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.