நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்தில் கூட நிற்பேன் என இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி வந்திருந்தார்.
பிரகாரம் முழுவதையும் சுற்றிப் பார்த்து அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். மேலும், அங்குள்ள புத்தக கடையில் புத்தகத்தை தேடிப் பார்த்து வாங்கினார். பின்பு அவருடன் அங்கிருந்த பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொடர்ச்சியாக சினிமா துறையினர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது. குறிப்பாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.மக்கள் பணிக்காக தேவைப்பட்டால் அவருடன் அரசியல் பயணத்திலும் கூட நிற்பேன்,” எனக் கூறினார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.