பிரபல மலையாள வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது இளம் நடிகை போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்பாபு நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து மயக்க மருந்து கொடுத்து பல தடவை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்படலாம் என்று பயந்து விஜய்பாபு துபாய் தப்பி சென்று விட்டார்.
நேரில் ஆஜராகுமாறு விஜய் பாபுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் நேரில் ஆஜராக முடியாது என்றும் 19-ந்தேதிவரை அவகாசம் வேண்டும் என்றும் விஜய்பாபு காவல்துறைக்கு மெயில் அனுப்பி உள்ளார். இதனை ஏற்காத போலீசார் சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வெளிநாடுகளில் உள்ள சிலர் தங்கள் கருப்பு பணத்தை விஜய்பாபு மூலம் சினிமாவில் முதலீடு செய்துள்ளனரா என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இந்த நிலையில் பாலியல் புகாரை வாபஸ் பெறும்படி நடிகைக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்கப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.