பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து வந்த தைப்பூச திருவிழா முடிந்து பல பிரபலங்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்கு சினிமா நடிகர் கௌதம் கார்த்திக் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். கௌதம் கார்த்திக் மனைவியும் சினிமா நடிகையுமான மஞ்சிமா மோகன் உடன் வருகை தந்தார்.
மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சாமி தரிசனம் செய்ய மலை மீது சென்றனர்.
மலை மீது சென்ற கௌதம் கார்த்திக்கை பார்த்து பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுக்க திரண்டனர். இந்த நிலையில் விரைவாக சாமி தரிசனம் செய்ய கௌதம் கார்த்திக் அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றார். பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து சினிமா நடிகர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.