தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் புளூ வைரஸ் தொடர்பான நோய்களும் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு கடந்த 2 நாட்களாகவே மிகக் கடுமையான உடல் வலியும், காய்ச்சலும் இருந்து வந்திருக்கிறது. இதற்கான மருந்து மாத்திரைகள் உட்கொண்டும் அவர் உடல் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த போது குஷ்புவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.
அவருக்கான சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வரும் மருத்துவர்கள் குழு ஓரிரு நாட்களில் குஷ்புவை டிஸ்சார்ஜ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்றும் உங்கள் உடல் ஏதாவது சொன்னால் தயவு செய்து அதை நிராகரிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தாம் காய்ச்சலில் இருந்து விரைந்து நலம் பெற்று வருவதாகவும் ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நல்ல மருத்துவர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள குஷ்பு, புளூ காய்ச்சல் மோசமானது என பகிர்ந்துள்ளார்.
இதன் மூலம் குஷ்பு புளூ வைரஸ் காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் அவருக்கு கொரோனா தொற்று கிடையாது என்பது தெளிவாகிறது.
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
This website uses cookies.