Categories: தமிழகம்

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!!

தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் புளூ வைரஸ் தொடர்பான நோய்களும் வேகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு கடந்த 2 நாட்களாகவே மிகக் கடுமையான உடல் வலியும், காய்ச்சலும் இருந்து வந்திருக்கிறது. இதற்கான மருந்து மாத்திரைகள் உட்கொண்டும் அவர் உடல் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த போது குஷ்புவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

அவருக்கான சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வரும் மருத்துவர்கள் குழு ஓரிரு நாட்களில் குஷ்புவை டிஸ்சார்ஜ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்றும் உங்கள் உடல் ஏதாவது சொன்னால் தயவு செய்து அதை நிராகரிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தாம் காய்ச்சலில் இருந்து விரைந்து நலம் பெற்று வருவதாகவும் ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நல்ல மருத்துவர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள குஷ்பு, புளூ காய்ச்சல் மோசமானது என பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் குஷ்பு புளூ வைரஸ் காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் அவருக்கு கொரோனா தொற்று கிடையாது என்பது தெளிவாகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.