தமிழ் திரையுலகில் திறமைக்கேற்ற அங்கீகாரம் பெறாமல் போன நடிகைகளில் லட்சுமி முக்கியமானவர். சம்சாரம் அது மின்சாரம் போன்ற சில படங்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம். அந்தப் படங்களும் இல்லையென்றால் கிளாஸிக் படங்களில் அட்டகாசமான நடிப்பைத் தந்த லட்சுமியை தமிழ் சமூகம் மறந்திருக்கும்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடிப்புத் திறமையை காண்பிப்பதில் வல்லவர். நடிப்பை பொறுத்தவரை எத்தனை தீனி போட்டாலும் லட்சுமிக்கு பத்தாது என்றே சொல்லலாம்.
1977ல் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படம் வேறு லெவல் ஹிட் ஆனது. பீம்சிங் இயக்கிய இந்தப் படம் ஜெயகாந்தன் எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசியவிருதை பெற்றார்.
மேலும் பிலிம் பேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளில் விருதுகளை குவித்தார். இப்படி இருந்த நடிகை லட்சுமியின் சொந்த வாழ்க்கை சோகமாகவே அமைந்தது.
லட்சுமியின் தாய் பழம்பெரும் நடிகை குமாரி ருக்மணி, தந்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால் சுலபமாக தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வாரிசு நடிகையாக நுழைந்தார்.
1969 ஆம் ஆண்டில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. அவர் வேறுயாருமில்லை நடிகை ஐஸ்வர்யா. பின்னர் 1974ல் விவாகரத்து பெற்ற லட்சுமி பின்னர் மலையாளப்படமான சட்டக்காரி படத்தில் நடித்த நடிகர் மோகன் ஷர்மாவுடன் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்தனர்.
மோகன் ஷர்மா வேறு யாருமில்லை, கோலங்கள், தாலாட்டு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடித்துக்கொண்டிருப்பவர். ஆனால் இந்த திருமணமும் 1980ல் முடிவுக்கு வந்தது. இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர்.
மோகன் ஷர்மா தமிழில் 1979ஆம் ஆண்டு வெளியான பகலில் ஓர் இரவு படத்தில் ஸ்ரீதேவியை காதலித்து ஏமாற்றிய காதலனாக நடித்திருப்பார்.
பின்னர் என் உயிர் கண்ணம்மா படத்தில் நடித்த போது, இயக்குநரும், நடிகருமான சிவச்சந்திரன் நடிகை லட்சுமி மீது காதல் வயப்பட்டு 1987ல் திருமணம் செய்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து சம்யுக்தா என்ற பெண் குழந்தையை 2000ஆம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். தற்போது வரை சிவசந்திரனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.