‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘மாபியா’ ‘ஓமணப்பெண்ணே’ போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் அருண்விஜய்யின் ‘யானை’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, ஜெயம்ரவியின் ‘அகிலன்’ எஸ்.ஜே. சூர்யாவின் ‘பொம்மை’ சிம்புவின் ‘பத்து தல’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட ஒரு தொகை படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகை பிரியா பவானி சங்கர், ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என கூறப்படும் நிலையில், தனது காதலரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து, காதலருடன் இணைந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நான் கல்லூரி படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்க வாய்ப்புக்கள் அதிகம் வருவதால் திருமணம் தள்ளிப் போய்விட்டது’ என்றும் தெரிவித்துள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.