கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.
இதன் மூலமாக நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர்.
மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் சமூக பிரச்சனைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடிகர் நடிகைகள் குரல் கொடுக்கும் வழக்கம் இருந்தது. குறிப்பாக சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல்துறையால் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு பல திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சமீபகாலமாக சமூக பிரச்சனை எழும்போது சினிமா நட்சத்திரங்கள் அமைதியாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து மரணமடைந்த மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நட்சத்திரம் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். நடிகையாவதற்கு முன்னர் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்ததால் அவருக்கு சமூக அக்கறை இயல்பாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.