‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ரஜினி 169’ படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
கடந்த, 1999 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு மிரட்டல் வில்லியாக நடித்து வில்லாதி வில்லியாய் முன்னணி வில்லன் நடிகர்களுக்கே டப் ஃபைட் கொடுத்தார் ரம்யா கிருஷணன். ‘படையப்பா’ என்றாலே ரஜினிக்கு அடுத்து ரம்யா கிருஷ்ணன் தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு, அவரின் நீலாம்பரி கதாபாத்திரத்தை அழுத்தமாக உருவாக்கியிருந்தார் கே.எஸ் ரவிக்குமார்.
இப்போதும், பல திரைப்படங்களின் வசனங்களிலும் மீம்ஸ்களிலும் ரம்யா கிருஷ்ணன் பேசிய ஒவ்வொரு வசனமும் தெறித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ‘படையப்பா’ படத்திற்குப்பிறகு ரம்யா கிருஷ்ணன் மீண்டும் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை மாதம் ‘ரஜினி 169’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.