தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா. இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா எம்.பி.யாக பதவி வகித்திருந்தார். சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் அவர் சமீபத்தில் கன்னடத்தில் வெளியான சார்லி -777 என்ற படத்தைப் பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 6 ஆம் தேதி அந்த படம் நன்றாக இருப்பதாக தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனை அவரது ரசிகர்கள் உட்பட பலரும் வரவேற்ற நிலையில் ப்ரீத்தம்.பிரின்ஸ்.கே என்ற பெயர் கொண்ட நபர் ஒருவர் ரம்யா பற்றி ஆபாசமாக கருத்து வெளியிட்டிருந்தார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்து தெரிவித்த அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர் முடிவு செய்தார்.
இதனையடுத்து, மர்மநபர் பற்றி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்ற நடிகை ரம்யா, மா்மநபர் மீது புகார் அளித்தார். அதில், தன்னை பற்றி இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட மர்மநபர் யார் என்று கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பற்றிய தகவல்களை சேகரித்து வருவதுடன், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.