பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் முன்பதிவின் கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து முதல்நாளில் இப்படம் பெரிய வசூலை குவிக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே நடிகை சுஹாசினி பேசிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. ஆம், பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது மணிரத்னத்திற்கு பதிலாக அவரின் மனைவி சுஹாசினி கலந்து கொண்டுள்ளார். அவர் பேசிய விஷயம் தான் ரசிகர்களின் ட்ரோல்ஸ்-க்கு உள்ளாகி இருக்கிறது.
அதன்படி அவர் “பொன்னியின் செல்வன் உங்க திரைப்படம், நீங்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும். இது உண்மையான தமிழ் கதை, ஆனால் படத்தின் ஷூட்டிங் ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நடந்தது.
தமிழ்நாட்டில் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடந்தது, மற்றபடி படமுழுக்க ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தான் நடந்தது. எனவே இது உங்க திரைப்படம்” என ரசிகர்களிடம் கூறியிருக்கிறார்.
இதனால் ரசிகர்கள் பலரும் பலவிதமாக சுஹாசினி-ன் பேச்சை ட்ரோல் செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.