ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் உள்ளிட்ட அருந்ததியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சீமான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உருவப்பொம்மையை எரித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரு கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் உண்டானது.
ஆத்திரமடைந்த ஆதித்தமிழர் கட்சியினர், நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது கற்கள், பாட்டில்களை வீசியதால் பரபரப்பு உண்டானது. இதுபோலவே நாம் தமிழர் கட்சியினருக்கும் பதிலுக்கு ஆதி தமிழர் கட்சியினர் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போன்று காட்சியளித்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.