திருச்சி : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழக அரசை கண்டித்தும், சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகர் செயல்படுவதாகக் கூறியும், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்துவதாகக் கூறி இபிஎஸ் உள்பட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல, திருவள்ளூரில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொன்னேரியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ஆம்புலன்ஸ் அவ்வழியாக வந்ததால் மறியலை கைவிட்டு போலீசாரின் சமரசத்தை ஏற்று கலைந்து சென்றனர். ஆம்புலன்ஸ் செல்வதற்காக மறியலை அதிமுகவினர் கைவிட்ட நிகழ்வு பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.