கோவை : மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. அதில், கோவை மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற திமுக, மேயர் பதவியையும் தனதாக்கியது. கோவை மாநகராட்சி மேயராக கல்பனா தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், மேயர் விடுதி பராமரிப்புக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ள கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் மாமன்ற கூட்டம் நடைபெறும் வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தரையில் அமர்ந்து, பதாகைகளை பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, கவுன்சிலர் பிரபாகரன் கூறியதாவது :- மேயர் இல்லம் புதுப்பிக்க 1 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும். சேர்மன் அலுவலகம் பணிக்கு 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படி மக்கள் வரி பணத்தை விரயமாக செலவு செய்கின்றனர்.
மேலும், திமுக அரசு, இதுவரை கோவைக்கு மத்திய அரசு ஒதுக்கப்பட்ட நிதியில் மட்டுமே திட்டங்களை தொடங்கி வருகிறது. கோவை மாநகராட்சி வருவாயிலிருந்து மேம்பாட்டுக்கு நிதிகளை ஒதுக்குவதோ, செலவுகளை செய்வதோ இல்லை, என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.