காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அதிமுக., கழக அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் காமராஜர் அவர்களை கலைஞர் கருணாநிதி மிகவும் மட்டமாக திட்டியவர் . ஆனால் காமராஜர் செய்த திட்டங்களில் ஒன்று கூட கருணாநிதி செய்யவில்லை.
தற்போது காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துகின்றனர். அம்மா உணவகத்தை படிப்படியாக மூட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் அவரது தந்தை பெயரை எங்கெல்லாம் வைக்க முடியுமோ, அங்கெல்லாம் வைக்கின்றனர். இது தான் அவர்கள் ஆட்சியின் சாதனை.
ஏற்கனவே அதிமுக, பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. வரும் 2024 தேர்தலிலும் கூட்டணி தொடரும். மீண்டும் மோடி தான் பிரதமராவார் என்று ஸ்டாலினே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக எதிரி கட்சி அல்ல எதிர் கட்சி தான், எனக் கூறினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.