நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் இருக்கிறது மக்கள் மறந்து விடலாம் என்று சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, சொத்து வரி உயர்வை திரும்பப் பெறவேண்டும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சியினர் ஈடுபட்டனர்.
முன்னதாகப் பேசிய வைத்திலிங்கம், நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. மக்கள் மறந்து விடலாம் என்று சொத்து வரியை 150 சதவீதமாக திமுக அரசு உயர்த்தியுள்ளது. அவர்களுடைய குடும்பத்திற்காக இந்த ஆட்சி நடக்கிறது. மக்களுக்காக இந்த ஆட்சி நடக்கவில்லை, எனக் கூறினார். இதில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.