பொள்ளாச்சியில் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரப்பிய அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த அருண்குமார் என்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்த பொள்ளாச்சி ஜோதி நகரை பகுதி சேர்ந்த ஷனாவாஸ் என்பவர் பார்த்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் தமிழக முதலமைச்சரை மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுடத்தை தவறாக பயன்படுத்தியது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.
இந்தநிலையில், அதிமுக பிரமுகர் அருண்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தை அதிமுக தேர்தல் பிரிவு செயலாளாரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அருண்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.