வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தீப்பை மக்கள் எழுத வேண்டும் என்று தாம்பரத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பின்பு முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் இலக்கிய அணி சார்பில் தாம்பரம் மெப்ஸ் அருகே அமைக்கபட்டிருந்த தண்ணீர் பந்தலை அதிமுக இலக்கிய செயலாளர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திறந்து வைத்தார்.
பின்பு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அவதிபடும் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது :- அண்ணாமலை திமுக ஊழல் பட்டியிலை வெளியிட்டுள்ளார். இந்த ஊழல் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஊழல் கட்சியினர் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இத்தனையாயிரம் கோடிகளை கொள்ளையடித்துள்ளனரா என்று நாட்டு மக்கள் திகைத்து போய் உள்ளனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் எழுத வேண்டும். மாநாடு நடத்துவதற்காக ஓபிஎஸ் எது நடத்தினாலும் சரி, அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக மிகப்பெரிய மாநாட்டை நடத்த போகிறது. நாளை நடைபெறவுள்ள செயற்குழுவியிலேயே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாடு குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளார். எனக் கூறினார்.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.