ஒபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், அதிமுக கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது என கோர்ட் தடை விதித்துள்ளது. ஆனாலும் ஓபிஎஸ் தரப்பினரில் சிலர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது எடப்பாடி தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்து, திருப்புவனம் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
போஸ்டரில், ‘அதிமுக கொடி, சின்னத்தை பயன்ப டுத்தும் ஓபிஎஸ் தரப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும்’ என எழுதப்பட்டிருந்தது. இது அப்பகுதி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.