சென்னை புழல் அருகே, ஓடும் அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது வழக்கறிஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இதற்காக தனது வீட்டில் இருந்து தினமும் மாநகரப் பேருந்து மூலம் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
அந்த வகையில், சம்பவத்தன்று, அவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு, மாலை அம்பத்தூரில் இருந்து மாநகரப் பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, அந்தப் பேருந்தில், புழல், அந்தோணியார் கோயில் 3வது தெருவைச் சேர்ந்த குருமூர்த்தி (58) என்பவர் பயணம் செய்துள்ளார்.
அப்போது அவர், அந்த இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், உடனடியாக பேருந்தில் வைத்தே குருமூர்த்தியிடம் தகராறு செய்து உள்ளார். பின்னர் இது குறித்து அறிந்த மாநகரப் பேருந்து ஓட்டுநர், புழல் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து, இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட குருமூர்த்தியை போலீசில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குருமூர்த்தியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னையும் கூப்டாங்க தம்பி.. ஆனா திருமா.. சீமான் பரபரப்பு பேச்சு!
முதற்கட்ட விசாரணையில், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குரு மூர்த்தி என்பவர் வழக்கறிஞர் என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு ஒரு வழக்கறிஞரே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.