தமிழகம்

நடுரோட்டில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு.. சென்னை டூ பரமக்குடி சென்ற முன்பகை!

ராமநாதபுரம் பரமக்குடியில் வழக்கறிஞர் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் உத்திரகுமார் (35). இவர் பரமக்குடி, கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சகோதரி ஜோதிமணி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல் உத்திரகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உத்திரகுமார் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக, சென்னை வேளச்சேரியில் 2024 மார்ச் மாதத்தில் நடைபெற்ற தொழிலதிபர் பழனிசாமி கொலை வழக்கில் உத்திரகுமார் கைதாகி சிறையில் இருந்தார். இதனிடையே, சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். ஏற்கனவே, பழனிசாமிக்கும், உத்திரகுமாருக்கும் ரியல் எஸ்டேட் பிரச்னையில் முன்விரோதம் இருந்துள்ளது.

எனவே, பழனிச்சாமி தரப்பினர் பழிவாங்கும் விதமாக, உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை, ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் பார்வையிட்ட நிலையில், குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: விஜயகாந்த்னா அது ஒருத்தர்தான்… அவர் இடத்தை ஒருத்தரும் : ராகவா லாரன்ஸ் அதிரடி!

இதனிடையே, கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்யக் கோரி, உத்திரகுமாரின் உறவினர்கள், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேநேரம், உத்திரகுமார் கொலை தொடர்பாக பழனிச்சாமியின் உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

9 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

9 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

9 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

11 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

12 hours ago

This website uses cookies.