திண்டுக்கல்லில், மனு அளிக்கச் சென்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பைக் கையிலெடுத்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் உதயகுமார். வழக்கறிஞரான இவர், திண்டுக்கல் திமுக அலுவலகம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் இருந்து, மாலை தனது குழந்தையை அழைத்து வரச் சென்றுள்ளார். அப்போது, கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படாமல் சாலையோரம் கிடப்பதால் பள்ளிக்கு வந்து செல்லும் பெற்றோரின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பள்ளி முன்பு சாலையோரம் கிடக்கும் மரக்கிளைகளை அகற்றக் கோரி, திமுக கட்சி அலுவலகத்தில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமியைச் சந்திக்க வழக்கறிஞர் உதயகுமார் சென்றுள்ளார். அப்போது, உதயகுமாரை வழிமறித்த அமைச்சரின் பாதுகாப்பு போலீசார், இதுகுறித்து நாங்களே மாநகராட்சியிடம் கூறி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் எனக் கூறி திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.
ஆனால், அமைச்சரைs சந்தித்து புகார் அளித்துவிட்டு தான் செல்வேன் எனக் கூறிய வழக்கறிஞர், கட்சி அலுவலகத்திற்குள் செல்ல முயன்றுள்ளார். இதனைத் தடுத்ததில் பாதுகாப்பு போலீசாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், போலீசார் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்.
பின்னர், இது குறித்து சக வழக்கறிஞர்களுக்கு உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இதன்படி, பிற வழக்கறிஞர்கள் வந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே, அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி அலுவலகத்தில் இருந்து காரில் சென்றுவிட்டார்.
இதனையடுத்து, கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், நேரம் ஆக ஆக வழக்கறிஞர்கள் அதிகமாக வரத் தொடங்கினர். இதனால், வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்வதைக் கண்ட வழக்கறிஞர்கள், திண்டுக்கல் அண்ணா சிலை ரவுண்டான பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மனைவிக்கு பயந்து வங்கியில் ரூ.15 லட்சம் கொள்ளை.. ஸ்கூட்டரால் சிக்கிய கணவர்!
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஏடிஸ்பி தெய்வம், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, வழக்கறிஞரைத் தாக்கிய அமைச்சரின் பாதுகாப்பு எஸ்எஸ்ஐ, போலீசார் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக் கூறி, இரவு 7.45 மணி வரை வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் ஐ.பெரியசாமியின் பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல்லில் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.