Categories: தமிழகம்

குழந்தை மீது பாசம்..நாடகத்தை அரங்கேற்றிய தாய் : கிணற்றில் கிடந்த பிஞ்சுக் குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி விஜயா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

இவர் சத்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மாத குழந்தை உள்ளது. குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் மருத்துவமனையில் இருந்து 2 நாள் முன்புதான் வீட்டிற்கு வந்தனர்.

குழந்தை மீது கணவர் ரமேஷ் அதிக பாசம் கொண்டிருந்தார். இந்நிலையில் ரமேஷ் பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழாவுக்கு நேற்று தீமித்தார்.

இவரோடு உறவினர்களும் வெளியில் சென்று விட்டனர். ரமேஷ் மனைவி சத்யா நேற்று மாலையில் வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது குழந்தை காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் குழந்தை அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 1மாத குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து சத்யாவிடம் விசாரணை செய்ததில் தனது 1 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சத்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் குழந்தையின் மீது கணவர் அதிக பாசம் வைத்ததாலும், குழந்தை எதிர்காலத்தில் ஊனமாக மாறலாம் என்று கருதியும் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு குழந்தை மாயமானதாக கூறி தேடுவதை போன்று நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

49 minutes ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

1 hour ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

2 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

3 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

3 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

5 hours ago

This website uses cookies.