நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை “செரியாபாணி” பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.
நாகையில் காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் கப்பல் போக்குவரத்து சேவை துவக்க விழா நிகழ்வில் துறைமுக கப்பல் மற்றும் நீர் வழிகள் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் மற்றும் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.
150 பயணிகள் அமரக்கூடிய வசதியுடன் கூடிய செரியாபாணி கப்பலில் பயணிக்க 50 பேர் முன்பதிவு செய்து இருந்த நிலையில் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் உட்பட பாஸ்போர்ட் விசா உள்ளிட்டவற்றை சோதித்து அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பயணம் செய்யும் நபர் ஒருவர் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் முனையத்தினை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் காவல்துறை சார்பில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், கார்த்திகேயன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.