தமிழகம்

9 மாதமாக ஃப்ரிட்ஜில் கிடந்த உடல்.. லிவிங் டுகெதர் காதலன் ஷாக்!

லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண்ணைக் கொன்று 9 மாதங்களாக ஃப்ரிட்ஜில் வைத்திருந்த காதலன் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் அடுத்த விருத்தவன் காலனி பகுதியில் வசித்து வந்தவர் பிங்கி பிரஜாபதி. இவர் சஞ்சய் என்பவர் உடன் லிவிங் டுகெதரில் வசித்து வந்தார். இவ்வாறு இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக லிவிங் முறையில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பிங்கி, சஞ்சயிடம் தன்னை திருமணம் செய்யும்படி கூறி உள்ளார். ஆனால், இதற்கு சஞ்சய் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே, இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது நண்பர் வினய் என்பவருடன் சேர்ந்து பிங்கியை பலமாகி தாக்கி உள்ளார். இதில் அப்பெண் உயிரிழந்துள்ளார். ஆனால், இந்தக் கொலையில் இருந்த தப்பிக்க முயன்ற சஞ்சய், வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் அப்பெண்ணின் உடலை 9 மாதமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் அங்கு மின்சார பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த குளிர் குறைந்து, அழுகிய உடலின் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கணவரை இழந்த பெண்ணுடன் பலமுறை உறவு.. திமுக பிரமுகர் மீது வழக்கு!

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, சஞ்சய் மற்றும் வினய் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.