தமிழகம்

2 வருட காதல் திருமணத்தில் திருப்பம்.. மனைவி சடலமாக மீட்பு : விசாரணையில் பரபர தகவல்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்துள்ள காலனி தெரு,கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த இரண்டு ஆண்டு முன் இன்ஸ்டாகிராம் மூலம் திருவாரூர் மாவட்டம் அகரத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த அபிநயா ஜோதி(19) என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார்.

பின்னர் அது காதலாகி இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டு முன் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அதனையடுத்து இருவரும் அபிநயா ஜோதி சொந்த ஊரான அகரத்த நல்லூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.

அப்போது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட பெண்ணின் தாயார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிலம்பரசனை எச்சரித்து அவரது சொந்த ஊரான கீழ் புளியம்பட்டு கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து சிலம்பரசன் காட்டுமன்னார்கோவில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள வாடகை வீட்டில் குடியேறினார். இதனைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் உள்ள எலக்ட்ரிக் கடையில் சொற்ப வருமானத்தில் வேலை செய்து வந்தார்.

இதில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் இருவருக்கும் தினந்தோறும்
சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும் அபிநயா ஜோதி போன் பேசினால் அவர் மீது சந்தேகப்பட்டு சிலம்பரசன் அவரை அடித்து ,திட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு சிலம்பரசன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்பொழுது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது அப்போது சிலம்பரசன் அருகில் இருந்த கட்டையை எடுத்து மனைவி அபிநயா ஜோடியை பலமாக தலையில் தாக்கியுள்ளார்.

அபிநயா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து மயக்கம் ஆனார் . இதனை கண்ட சிலம்பரசன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அபிநயா ஜோதியை காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா ஜோதி உயிரிழந்தார்.

இதனை அடுத்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், காட்டுமன்னார்கோயில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து சிலம்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காட்டுமன்னார்கோயில் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.