Categories: தமிழகம்

அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதல் வரிசையில் அமரலாம் என்பதற்கு நான் சாட்சி : இபிஎஸ்சை சந்தித்த பின் ஆர்.பி. உதயகுமார் நெகிழ்ச்சி!!

ஜெயலலிதாவிற்கு எவ்வாறு விசுவாசமாக இருந்தோமோ அதே போன்று எடப்பாடி பழனிசாமிக்கும் விசுவாசத்துடன் பணியாற்றுவோம் என ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்பி உதயகுமார் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சாமானிய தொண்டன் எனக்கு இந்து வரலாற்று வாய்ப்பினை வழங்கி இருக்கிறார். அவரது நம்பிக்கைககு உரியவனாகவும் தலைமைக்கும், கழகத்துக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது எவ்வாறு விசுவாசமாக பணியாற்றினோமோ அதேபோன்று பணியாற்றுவோம்.

சாமானிய தொண்ணடனும் முதல் வரிசையில் அமரலாம் என்பதை நிரூபித்து காட்டுவதற்கு எடுத்துக்காட்டாக சாட்சியாக இன்று நானும் இருக்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கை நோக்கத்தோடு எனக்கு தெய்வ உள்ளதிடு இந்த வரலாற்று வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்கள்.

திமுகவின் நிர்வாக குளறுபடிகளை தோல் உரித்து காட்டுகிற பணியினை கடந்த ஓராண்டு காலமாக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார் .இனிவரும் காலங்களிலும் அவர் காட்டுகிற வழியில் பயணிக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியை வார்த்தையால் சொல்லாமல் வாழ்வில் வாழ்ந்து காட்டுவேன் என்று கூறினார்.

அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உயர்நிலையை அடைந்துள்ளார்கள் இன்று அதில் நானும் ஒருவனாக ஒரு சாட்சியாக இருக்கிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர நியமனம் தொடர்பாக சட்டப்படி முறைப்படி சபாநாயகர் நடவடிக்கை நடக்கட்டும் என அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

12 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

13 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

14 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

15 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

15 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

16 hours ago

This website uses cookies.