Categories: தமிழகம்

மீண்டும்.. மீண்டுமா? ஓட்டுநர் மர்ம மரணம்? காவல்நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்.. மக்களுடன் இணைந்து அதிமுக குரல்!!

மீண்டும்.. மீண்டுமா? ஓட்டுநர் மர்ம மரணம்? காவல்நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்.. மக்களுடன் இணைந்து அதிமுக குரல்!!

தென்காசி மாவட்டம் சங்கரன் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டுநராக உள்ளார். இவர் நேற்று இரவு அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள மக்களை மகா சிவராத்திரியை முன்னிட்டு வேனில் ஏற்றிக் கொண்டு சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளார்.

அப்போது சங்கரன் கோவில் நகரப் பகுதியில் வேன் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்தில் வந்த போலீசார், மக்களை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு, முருகனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளார்.

செய்வதறியாமல் நின்ற மக்கள், சிறிது நேரம் கழித்து காவல்நிலையத்திற்கு சென்று ஓட்டுநர் முருகன் எங்கே என கேட்டுள்ளனர்,, அப்போது முருகன் இறந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் கிடைத்த முருகனின் உறவினர்கள் சங்கரன் கோவில் டவுன் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அங்கிருந்து உடலை பிரதே பரிசோதனைக்கு எடுத்து செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிபோதையில் முருகன் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர், சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் ஓட்டுநர் முருகனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்தனர்.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் முருகனின் உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. உயிரிழந்த ஏழைத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும்வரை அதிமுக மக்களுடன் இணைந்து போராடும் என தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா திருதிரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா MLA கூறியுளள்ர்.

இதையடுத்து தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.S.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் Ex.MLA., அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் திருமதி.V.M.ராஜலட்சுமி அவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.