தமிழகத்தில் விவசாய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கியுள்ள சுமார் ஆறாயிரம் கோடி ரூபாய் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தமிழக தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியுள்ளார்.
பாஜக விவசாய அணி கன்னியாகுமரி கோட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடியில் நடைபெற்ற விவசாயிகள் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வகையில் அனைவருக்கும் இயற்கை விவசாய உரங்கள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மூடை ஒன்றுக்கு 2100 ரூபாய் வழங்குகின்ற நிலையிலும், தமிழக அரசு நெல் கொள்முதலில் ஊழல் செய்கிறது. கடந்த ஆண்டு 9 லட்சம் டன் நெல் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல விவசாய திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமல் உள்ளது.
பாஜக விவசாய அணி மூலமாக விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைய முழு முயற்சி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கை தீவிர படுத்தப்படுகிறது. திமுக அரசு கடந்த தேர்தலின் போது கரும்புக்கு குறைந்தபட்ச விலை 4000 ரூபாய் வழங்குவோம் என்று கூறிய திமுக அரசு இதுவரை அதனை நிறைவேற்ற வில்லை. இதன் காரணமாக 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கரும்புகள் வெட்டப்படாமல் அப்படியே கிடைக்கிறது.
மத்திய அரசு விவசாயிகளுக்காக வழங்கி வரும் திட்டங்களில் தமிழக அரசு பாரத பிரதமரின் படத்தை தவிர்த்து வருகிறது. அனைத்து நிறுவனங்களும் ஒரே பெயரில் பாரத் உரம் என்ற ஒரே பெயரில் உரத்தை விநியோகம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும் போது உரம் தொடர்பான பிரச்சனைகள் களையப்படும்.மேலும் இயற்கை உரங்கள் தயாரிக்க மத்திய அரசு உடனடி அனுமதி வழங்கி வருகிறது.
வெளிமாநில நெல்லை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காக சன்ன ரக நெல் உற்பத்தியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தின் விவசாய திட்டங்களுக்காக வழங்கிய தொகையில் 5990 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது.
உடன் விவசாய அணி மாநிலதுனைதலைவர் ஜெயக்குமார்,மாநில திட்ட பொறுப்பாளர் ஸ்ரீராம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.