தேனி : பெரியகுளம் வடுகபட்டி பேரூராட்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி 3 சுயேச்சை வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
இதில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கும் 45 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் 1, 10, மற்றும் 11 ஆகிய மூன்று வார்டுகளிலும் பிரதான கட்சிகளான திமுக அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் 1வது வார்டில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த முத்துச்செல்வி, 10 வது வார்டில் போட்டியிட்ட ஜெயராமன், 11 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட விமலா, ஆகிய மூவரும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திலையில் சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்ட மூன்று வார்டுகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்த நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சுயேட்சையாக 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது இரு கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.